சரணடைய வேண்டும் என எச்சரித்த போலீஸ்! எவ்ளோ சொல்லியும் கேட்காமல் மிரட்டல்... அடங்காத குற்றவாளியை சிங்கம் போல் சீறிப்பாய்ந்த பிடித்த அதிகாரிகளின் நாய்! வைரலாகும் வீடியோ!!!



san-diego-police-dog-arrests-attacker-viral-video

அமெரிக்காவின் சான் டியாகோவில் பார்க்கிங் பணியாளரை தாக்கிய இளைஞரை போலீஸ் நாய் உதவியுடன் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காயமடைந்த பணியாளர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

பார்க்கிங் தளத்தில் தாக்குதல்

சான் டியாகோவின் ‘டைல்கேட் பேட்ரஸ்’ பார்க்கிங் தளத்தில் பணியாற்றி வந்த 25 வயது ஊழியரை, 20 வயதான லாதாபவுன் கியோவோங்சா மரக்கட்டையால் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் அந்த ஊழியரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த நிலையில் அவரைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக உதவியளித்து மருத்துவமனைக்கு அனுப்பினர்.

எச்சரிக்கையை மீறிய இளைஞர்

தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சுமார் 6 அடி நீள தடியுடன் நின்றிருந்த கியோவோங்சாவை சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர் உத்தரவுக்கு இணங்காமல் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, முதலில் உயிரிழப்பை ஏற்படுத்தாத ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும் அவர் அடங்காததால் நிலைமை மேலும் பதற்றமாக மாறியது.

இதையும் படிங்க: ஒரு நொடி தாங்க.... 5 வயது புள்ளையை தரையில் இழுத்து போட்டு கடித்து குதறிய தெரு நாய்! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி!

போலீஸ் நாய் அதிரடி

அதன்பின் களமிறக்கப்பட்ட போலீஸ் நாய் மின்னல் வேகத்தில் பாய்ந்து, கியோவோங்சாவின் கையைப் பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை பதிவான viral video சமூக வலைதளங்களில் பரவி கவனம் ஈர்த்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: தெருவில் விளையாடிய 10 வயது சிறுவனை திடீரென தாக்கி தூக்கி வீசிய மர்ம நபர்! கொலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!!