ஐயோ... கொடுமையே! நொடியில் சாவை கண்ணு முன்னாடியே காட்டிட்டு.... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்! கண் கலங்க வைக்கும் நேபாள காட்சி!!!



nepal-devastating-flood-thousands-displaced

நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. ஒரே இரவில் வீடு, உடைமை, வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்து வருகின்றனர். கடும் குளிரிலும் பசியிலும் தவிக்கும் பலர் பாதுகாப்பற்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள்; 

பல பகுதிகளில் வெள்ள நீர் ஆக்ரோஷமாக பெருக்கெடுத்து ஓடியதால், அதில் சிக்கியவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. இதனால், காணாமல் போன தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை எங்கு தேடுவது என்று தெரியாமல் பல குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் இயற்கை ஏரி உடைந்து.... திடீரென வெளியேறிய 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர்! உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேடான பகுதிகளுக்கு ஓடும் மக்கள்..!!!

இடிபாடுகளில் சிக்கியும் வெள்ளத்தில் அடித்துச் சென்றும் உயிரிழப்பு

வெள்ளத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அவற்றின் இடிபாடுகளில் சிக்கியும், பெருக்கெடுத்த நீரில் அடித்துச் செல்லப்பட்டும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் போராட்டம்

வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியவர்களில் பலர் கை, கால்களில் முறிவு உள்ளிட்ட பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப்பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெறும் நிலையில், மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி... மீண்டும் நிலச்சரிவால் தடுப்புகள் உடைந்து சீறிப்பாய்ந்த வெள்ளநீர்! அலைக்கழியும் 1500 உயிர்கள்... திபெத் எல்லை பகுதியில் அடுத்த பேரதிர்ச்சி! சற்றுமுன் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை....!!!