நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது கிடைக்கும்? வேளாங்கண்ணி பாதயாத்திரையில் அமைச்சர் மரிய வில்சன் சொன்ன முக்கிய தகவல்....!!!
வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றம் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி நோக்கி சென்று வருகின்றனர். இதனிடையே, தமிழக நிதியமைச்சர் நெ.மரிய வில்சனும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது 28 ஆண்டுகால வேளாங்கண்ணி பாதயாத்திரை குறித்தும், அரசின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
28 ஆண்டுகளாக தொடரும் வேளாங்கண்ணி பாதயாத்திரை
கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்று வருவதாக மரிய வில்சன் தெரிவித்தார். இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் யாத்திரை என்பதால், இது தனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.
பாதயாத்திரை செல்லும் வழியில் பொதுமக்கள் அளித்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருவிழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால், அவர்களுக்கான தேவையான ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறித்து விளக்கம்
ஆட்சியின் முதல் 100 நாட்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அரசின் நிதிநிலை மற்றும் வருவாயை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்தார். வணிகவரி, பதிவுத்துறை, ஜிஎஸ்டி உள்ளிட்ட துறைகளில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிதிநிலை சீரானதும் மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மாநிலத்தின் நிதிநிலை சீரடைந்ததும் முதலமைச்சரின் ஆலோசனையுடன் தகுதியான பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என மரிய வில்சன் தெரிவித்தார். அவரது இந்த விளக்கம் தற்போது அரசியல் மற்றும் பொதுமக்கள் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடுகள் குறித்து ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அரசியல் கூட்டணி தொடர்பாக வெளியாகும் பல்வேறு யூகங்களை மக்கள் நம்புவதில்லை என்றும், நாட்டின் எதிர்கால தலைமையை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் அவசர நடவடிக்கையால் அரசியலில் பரபரப்பு! தவெக செக் வைக்கும் முக்கிய தொகுதிகள்.... அம்பலமான சீக்ரெட் பிளான்!!!