நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
சகோதரிக்கு ராக்கி கட்டிய அடுத்த சில மணி நேரத்தில்... போட்டோவோடு வாட்ஸ்அப்பில் வைத்த கடைசி மெசேஜ்...! 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு...!!!
மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் ரக்ஷா பந்தன் நாளன்று சகோதரியை சந்தித்து ராக்கி கட்டிக்கொண்ட 11ஆம் வகுப்பு மாணவர் ரோஹித் சாஹேப்ராவ் தாங்கர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். வீட்டுக்கு திரும்பிய அவர், சகோதரியுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் பெற்றோரை கவனித்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரியுடன் புகைப்படம்.. அடுத்த சில மணி நேரங்களில் சோகம்
ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த ரோஹித், தனது சகோதரியுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதன்பிறகு, வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் குறித்தும் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் குறித்தும் மற்றொரு பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அவரது பதிவுகளில் இருந்த விடைபெறும் தன்மையிலான வார்த்தைகள் தற்போது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: அடுத்து நிமிஷம் என்ன நடக்கும்ன்னு தெரியல...! ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோதே மருத்துவர்கு நடந்த அதிர்ச்சி.... பகீர் காட்சி!!!
ஆன்லைன் கேமிங் மூலம் பண இழப்பா?
ஆரம்பகட்ட விசாரணையில், ஆன்லைன் கேமிங் மூலம் ரோஹித் பணத்தை இழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது நண்பருக்கு அனுப்பியதாக கூறப்படும் காணொளியும் விசாரணையில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உயிரிழப்புக்கான முழுமையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் தெளிவு பெற வேண்டியுள்ளது.
மாணவர்களின் மனநலத்தில் கவனம் தேவை
ரோஹித்தை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மனநலம் தொடர்பான சிக்கல்கள், திடீர் தனிமை, வழக்கத்துக்கு மாறான சமூக வலைதளப் பதிவுகள் அல்லது விடைபெறும் வார்த்தைகள் போன்ற அறிகுறிகளை குடும்பத்தினர் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டியது அவசியம். பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட எந்த சிக்கலாக இருந்தாலும், இளைஞர்களிடம் குற்றம்சாட்டாமல் அமைதியாகப் பேசி, தேவைப்பட்டால் மனநல நிபுணர்களின் உதவியைப் பெறுவது முக்கியம்.
இதையும் படிங்க: ஐயோ... நா வரல..! பிரசவ அறையில் கதறி துடித்த கர்ப்பிணி மகள்! அடுத்த 5 நிமிடத்தில் நடந்த கொடூரம்... அதிர்ச்சி வீடியோ!!!