நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
மீண்டும் இயற்கை ஏரி உடைந்து.... திடீரென வெளியேறிய 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர்! உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேடான பகுதிகளுக்கு ஓடும் மக்கள்..!!!
திபெத்தின் எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் உருவான இயற்கை தடுப்பு ஏரி மீண்டும் உடைந்து தண்ணீர் வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனால் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லையோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு, பனிச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
25 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கிய ஏரி
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து அதன் இடிபாடுகளால் இயற்கையான தடுப்பு ஏரி உருவானது. இந்த ஏரியில் சுமார் 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது அது நிரம்பி வழிந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதையும் படிங்க: முதலிரவு அறைக்குள் போன மணப்பெண்! சில நிமிடங்களில் பெண்ணின் அலறல் சத்தம்... மாப்பிள்ளையை கண்டதும் காத்திருந்த அதிர்ச்சி...! பகீர் சம்பவம்!!!
தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், நேபாளம் மற்றும் சீனப் பகுதி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரசுவாவில் ஹெலிகாப்டர் மீட்பு பணி நிறுத்தம்
திடீர் வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன.
இதையடுத்து உள்ளூர் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளை நோக்கி செல்லத் தொடங்கினர். மறுபுறம், திபெத்தின் கிராங் பகுதியில் பணியில் இருந்த சீன மீட்புக் குழுவினரும் வாகனங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு பின்வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்கு மேலும் சவால்
ஏற்கெனவே ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவால் நேபாளத்தில் 469-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எல்லையின் இருபுறங்களிலும் சேர்த்து சுமார் 1,400 முதல் 1,500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல பகுதிகளில் சேறும் சகதியும் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள Glacial Lake வெள்ளம் மீட்புக் குழுவினருக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.