இஸ்ரேயல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் ! ஒரே ஏவுகணையில் 80 குண்டுகள்..... வானிலே வெடித்து சிதறும்! போர் முடிந்தாலும் மக்களை கொல்லும் அபாய காட்சி!!!
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்ரேலை குறிவைத்து நடத்திய சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல் உலகளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரே நேரத்தில் பல சிறு குண்டுகளை பரப்பக்கூடிய கிளஸ்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளஸ்டர் பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலில், வானிலேயே வெடித்து நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளை பரப்பக்கூடிய கிளஸ்டர் பேலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 7 கிலோமீட்டர் உயரத்தில் இந்த ஏவுகணையின் தலைப்பகுதி வெடித்து, அதிலிருந்து 80-க்கும் மேற்பட்ட சிறு குண்டுகள் சுமார் 8 கிலோமீட்டர் சுற்றளவில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
டெல் அவிவ் அருகே காயமடைந்த பொதுமக்கள்
இந்த தாக்குதலில் குறிப்பாக டெல் அவிவ் நகரத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் விழுந்ததால் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 28 முதல் இதுவரை நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: அரசியலுக்காக அண்ணா நகர் வணிக வளாகத்தை விற்ற விஜய்! 34.65 கோடிக்கு கைமாறிய சொத்து! அரசியல் பயண விரிவான வீடியோ...!!!
எந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன?
ஈரானின் ‘கதிர்-எஸ்’ (Qadr-S) மற்றும் ‘கோர்ரம்ஷாஹர்’ (Khorramshahr) போன்ற நீண்ட தூர ஏவுகணைகள் இந்த கிளஸ்டர் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை என இஸ்ரேலிய பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதம்
கிளஸ்டர் குண்டுகள் உலகளவில் மிகவும் கொடூரமான ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. இவை ஒரே இடத்தில் வெடிக்காமல் பெரிய பரப்பளவில் பல சிறிய வெடிப்புகளை ஏற்படுத்துவதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகின்றன. மேலும் பல சிறு குண்டுகள் உடனடியாக வெடிக்காமல் தரையில் கிடக்கின்றன; அவை பின்னர் கண்ணிவெடிகளைப் போல செயல்பட்டு பல ஆண்டுகள் கழித்தும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
உலக நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்
2008-ஆம் ஆண்டு கிளஸ்டர் குண்டுகளை தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிகரித்து வரும் இந்த இஸ்ரேல்–ஈரான் மோதல் வான்வழித் தாக்குதல்களைத் தாண்டி கடல் பகுதிகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.