வீட்டு கழிவறையில் கேமரா வைத்து இன்ப கண்ட நபர்! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
வீட்டு கழிவறையில் கேமரா வைத்து இன்ப கண்ட நபர்! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
இங்கிலாந்து நாட்டில் நபர் ஒருவர் தனது வீட்டின் கழிவறையில் கேமராவை வைத்து அதன் மூலம் தனது வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கழிவறையை பயன்படுத்துவதை வீடியோ எடுத்து இன்ப கண்ட இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் கிரீன் கவுச்சர் என்ற நபர் தனது வீட்டிற்கு வரும் நபர்கள் அவரின் வீட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்துவதை வீடியோ எடுத்து இன்பம் கண்டு வந்துள்ளார். ஒரு நாள் அவரது வீட்டிற்கு வந்த பெண் அவரின் கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஒரு இடத்தில் துணிகள் சந்தேகத்திற்கிடமாக திணித்து வைக்கப்பட்டிருந்தன. அதை நீக்கி பார்த்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. அந்த துணிகளுக்கு இடையே மொபைல் கேமரா ஒன்று இருந்துள்ளதை பார்த்துள்ளார்.
உடனே அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வந்து கிரீன் கவுச்சரை கைது செய்து அவரின் மொபைல் போனை பறிமுதல் செய்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் பல பெண்கள் மற்றும் சிறுமிகள் உடை மாற்றும் வீடியோ இருந்துள்ளது.
அதனை அடுத்து கவுச்சரை பாலியல் குற்றப்பிரிவின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.