நாள் முழுவதும் வீட்டுவேலை செய்தாலும்... பெண்களுக்கு ஏன் தனியாக உடற்பயிற்சி தேவை?
காலை முதல் இரவு வரை ஓய்வின்றி வேலை செய்கிறேன். அதுவே உடற்பயிற்சி இல்லையா?" — பல பெண்களின் பொதுவான கேள்வி இதுதான். ஆனால், இதற்கு மருத்துவ நிபுணர்கள் கூறும் பதில் ஆச்சரியப்பட வைக்கிறது.
சமையல், வீடு சுத்தம் செய்தல், துணி துவைத்தல், குழந்தைகளை கவனித்தல் என வீட்டுவேலைகள் உடலை சுறுசுறுப்பாக வைத்தாலும், அவை முழுமையான உடற்பயிற்சிக்குச் சமமானவை அல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டுப் பணிகள் உடலின் சில தசைகளுக்கு மட்டுமே வேலை கொடுக்கின்றன. ஆனால் நடைப்பயிற்சி, யோகா, நீட்டிப்பு பயிற்சிகள் போன்றவை உடலின் அனைத்து பகுதிகளையும் இயக்கி, தசை வலிமையை அதிகரிப்பதோடு உடலின் சமநிலையையும் பாதுகாக்கின்றன.
இதையும் படிங்க: அடிக்கடி தலைவலி வருகிறதா? உஷார்.! இப்போவே கவனிக்கலன்னா.. வருத்தப்படுவீங்க.!

குறிப்பாக, குழந்தை பிறந்த பிறகு அல்லது நீண்ட நேரம் வீட்டிற்குள் இருப்பதால் பல பெண்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி, முழங்கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தினமும் வெறும் 20 முதல் 30 நிமிடங்கள் ஒதுக்கி செய்யப்படும் எளிய உடற்பயிற்சிகளே இந்த பிரச்சினைகளை கணிசமாக குறைக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சியின் பலன் உடலோடு மட்டும் முடிவதில்லை. மனஅழுத்தம், சோர்வு, பதட்டம் போன்றவற்றைக் குறைத்து மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
குடும்பத்தின் நலனுக்காக தினமும் உழைக்கும் பெண்களுக்கு இது கூடுதல் ஆற்றலையும் உற்சாகத்தையும் வழங்குகிறது.
"வீட்டுவேலை செய்கிறேன்; அதுவே போதும்" என்ற எண்ணத்தை மாற்ற வேண்டிய நேரம் இது. தினமும் அரை மணி நேரம் உங்களுக்காக ஒதுக்குங்கள்.
அந்த சிறிய நேரம் உங்கள் உடலுக்கும், மனதிற்கும், எதிர்கால ஆரோக்கியத்திற்கும் மிகப்பெரிய முதலீடாக அமையும்.
இதையும் படிங்க: உங்கள் நேரம் முழுதையும் குழந்தையே எடுத்துக்கொள்கிறதா.? இப்படி மேனேஜ் செய்தால் ஸ்ட்ரெஸ் குறையும்.!