BREAKING : தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு.... கொத்தாக புதையுண்ட 30 தொழிலாளர்கள்! நெஞ்சை பதறவைக்கும் சோகம்...!!!
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் நனா-மாம்பேரே மாகாணத்தில் இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்ததில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கினர். இதில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திடீரென சரிந்த சுரங்கம்
மேற்கு பகுதியில் உள்ள ஹப்பா பகுதியில் இந்த தங்கச் சுரங்கம் செயல்பட்டு வந்தது. தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலம் சரிந்து, பாறைகள் மற்றும் மண் சுரங்கத்துக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வேலை செய்தவர்கள் வெளியேற முடியாமல் இடிபாடுகளுக்குள் புதையுண்டனர்.
இதையும் படிங்க: 2 கோடி தரேன்... என்கூட வா... ஆசை வார்த்தை சொல்லி 17 வயது சிறுவனை சிதைத்த கொடூரம்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை...!!!
30 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் பல மணி நேரம் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் 30 தொழிலாளர்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. தங்கச் சுரங்க விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடிபாடுகளில் தொடர்ந்து தேடுதல்
நிலச்சரிவில் காயமடைந்த தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் கருதுகின்றனர். இதனால் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் சுரங்கப் பணிகள் நடைபெறுவது குறித்து அப்பகுதியில் நீண்டகாலமாக கவலை நிலவி வருகிறது. இந்நிலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.