இதற்கெல்லாம் மெஷினா..!! வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள...எப்படி தெரியுமா.?

இதற்கெல்லாம் மெஷினா..!! வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள...எப்படி தெரியுமா.?



mechine for suiide

தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் பணிச்சுமை மிகவும் குறைந்துவிட்டது. விவசாயம் செய்வதற்கு கூட பணியாட்கள் தேவையில்லை என்று கூறும் அளவிற்கு எந்திரமயமாகிவிட்டது. மனிதன் தனக்கு தேவைப்படும் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு எந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு கூட ஒரு எந்திரந்த்தை கண்டுபிடித்திருப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசே ஒப்புதல் வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. இந்தநிலையில், "டாக்டர் டெத்" என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் மருத்துவருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். 

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற எந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக்கொண்டு அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும் அடுத்தாண்டு முதல் இந்த எந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.