மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இணை பிரியாத தம்பதிகளாக நேர்ந்த சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்.!
தன்னுடன் அன்பாக இருந்த கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதி:
கேரளா மாநிலத்தில் உள்ள பாலா, புத்தன்பள்ளி வாழையிலை பகுதியில் வசித்து வருபவர் குரியன் ஜோசப் (வயது 74). இவர் வியாபாரி ஆவார். கேரளா காங்கிரஸ் வழிநடத்தல் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார். இவரின் மனைவி ஷெர்லி (வயது 71).
மரணம்:
கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி வயது மூப்பு காரணமாக குரியன் இயற்கை எய்தினார். இதனால் ஷெர்லி மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், கணவரை நினைத்து வருந்தி இருக்கிறார்.

சடங்கு:
இதனிடையே, நேற்று குரியனின் இல்லத்தில் வைத்து சடங்குகள் நடைபெற்றுள்ளன. பின் அவரின் உடலை தேவாலயம் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. அப்போது, ஷெர்லி தனது கணவருக்கு இறுதி முத்தம் கொடுக்க குனிந்த நிலையில், அவர் பின் எழுந்திருக்கவில்லை.
மரணம்:
இதனை கவனித்த உறவினர்கள் அவரை தூக்க முற்பட்டபோது, அவர் அசைவில்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்த தம்பதிகளின் 3 மகள்களும் கலங்கிப்போயினர். தம்பதிகளின் இறுதிச்சடங்கு ஒரே நேரம் & இடத்தில் நடக்க குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து பலே நாடகம்.. 2 ஆண்டுகளுக்குப்பின் கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண்.. பரபரப்பு தகவல்.!