யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை! காரணத்தை கேட்டா ஆடிப்போயிருவீங்க.... பகீர் சம்பவம்..!!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பத்தில், யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தியின் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் படித்து வந்த சிறுவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தாய் கண்டித்ததைத் தொடர்ந்து நடந்த சோகம்
நடுக்குப்பம் பகுதியில் தனது குழந்தைகளுடன் வசித்து வரும் ஆர்த்தியின் மகன் தியோ ஆழிசை, அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று அவரது தாய் கண்டித்ததாக குடும்பத்தினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்ன ஒரு நடிப்புடா சாமி! வலிப்பு வந்தது போல நடுரோட்டில் நாடகமாடிய பெண்! கடைசியில் அம்பலமான பகீர் பின்னணி…!!!
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மரக்காணம் போலீசார் தீவிர விசாரணை
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மரக்காணம் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் மற்றும் பின்னணி குறித்து குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.