என்ன ஒரு நடிப்புடா சாமி! வலிப்பு வந்தது போல நடுரோட்டில் நாடகமாடிய பெண்! கடைசியில் அம்பலமான பகீர் பின்னணி…!!!



coimbatore-woman-fake-seizure-money-scam

கோவை ரத்தினபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், வலிப்பு ஏற்பட்டது போல் சாலையோரத்தில் நடித்து பொதுமக்களிடம் பணம் பெற்றதாக ஒரு பெண் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது செயல்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சாலையில் திடீரென விழுந்து உதவி கேட்ட பெண்

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சாலைகளில், அந்தப் பெண் திடீரென தரையில் விழுந்து கைகால்களை உதறி வலிப்பு ஏற்பட்டது போல் நடித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு பதற்றமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மனிதாபிமான அடிப்படையில் முதலுதவி அளித்ததுடன், மருத்துவச் செலவுக்காக தங்களால் இயன்ற அளவில் பணமும் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: செல்போனில் பலான படம் பார்த்த நபர்? போன் லைனில் வந்த டுபாக்கூர் போலீஸ்.. கோவையில் ருசிகர சம்பவம்.! 

தொடர்ச்சியாக நடந்த அதே பாணி செயல்

ஒரே மாதிரியான சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் நடந்ததை சிலர் கவனித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அவர் வலிப்பு வருவது போல் நடிக்கும் காட்சிகளை ரகசியமாக தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும், பெண்ணின் செயல் குறித்து பரபரப்பு ஏற்பட்டது.

வைரல் வீடியோவைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை

வைரலான காவல்துறை விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோக்களின் அடிப்படையில், பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்றதாகக் கூறப்படும் மர்மப் பெண்ணை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு பொழப்பா.? ஜோடிகளை வேவு பார்க்க இளைஞர் செய்த அந்த ஒரு வேலை! பகீர் கிளப்பும் பின்னணி.!!!