பிளாக்கில் வாங்கிய சரக்கு எமனான சோகம்.. போர்க்கொடி தூக்கிய உறவினர்கள்.. கண்ணீர் குமுறல்.!



Youth Dies After Consuming Illegally Sold TASMAC Liquor in Mayiladuthurai; Relatives Stage Protest

திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை குடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவுநேர வேலை:

மயிலாடுதுறை மாவட்டம் தென்னலக்குடி பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் ஆவார். பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று சதீஷ் இரவு நேர வேலைக்குச் சென்றுவிட்டு, பின் மீண்டும் காலை வீட்டுக்கு வந்துள்ளார். 

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

டாஸ்மாக் திருட்டு மது:

அப்போது, வழியில் தென்னலக்குடி பகுதியில் டாஸ்மாக் கடை அருகிலேயே, காலை 10 மணிக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட டாஸ்மாக் மதுவை வாங்கி குடித்துள்ளார். இதனை குடித்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

உறவினர்கள் போராட்டம்:

அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது மயக்கமான நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு சாலையை மறித்து போராட்டம் செய்தனர்.

காவல்துறை விசாரணை:

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷுக்கு மனைவியும், ஒரு பெண், 2 ஆண் என 3 குழந்தையும் இருக்கின்றனர். திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவில் இருந்தது என்ன? என்பது தெரியாததால் உறவினர்கள் துயரத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!