14 வயது மகனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்.! நேரில் பார்த்த சகோதரிக்கு நேர்ந்த கதி!

14 வயது மகனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்.! நேரில் பார்த்த சகோதரிக்கு நேர்ந்த கதி!


women-kill-mother-and-sisiter

பெரம்பலூர் அடுத்துள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராணி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2வது மகளுக்கும் திருமணமாகி அதே ஊரில் தாயாரின் வீட்டிற்கு அருகே 14 வயது மகன் வினோத்குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 19ம் தேதியன்று நீண்ட நேரமாகியும் ராணியின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ராஜேஸ்வரி உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், உயிருக்கு போராடிய ராணியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி ராணியும் உயிரிழந்தார். 

பணப் பிரச்சனையால் இருவரும் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், கழுத்தில் காயங்கள் இருந்ததால் போலீசார் ராணியின் இரண்டாவது மகள் வள்ளியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் வள்ளி கூறுகையில், தாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இளைய மகள் ராஜேஸ்வரியை மட்டும், தன்னுடன் வைத்துக்கொண்டு பல்வேறு வகையில் உதவி செய்து வந்ததால் இருவர் மீதும் எனக்கு கோபம் இருந்தது.

Murder
 
மேலும், தாய் ராணியிடம் கடனை அடைப்பதற்காக சொத்தை விற்று தர கேட்டதாகவும், அதற்கு ராணியும், தங்கை ராஜேஸ்வரியும் மறுப்பு தெரிவித்ததால், தன் மகன் வினோத் குமாருடன் சேர்ந்து விஷம் கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனை பார்த்துவிட்ட சகோதரி ராஜேஸ்வரியை தனது 14 வயது மகனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு வழக்கம் போல் பக்கத்து தெருவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் காலை கோலம் போட வருவது போன்று ஊரைக் கூட்டி தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வள்ளியையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது 14 வயது மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.