சென்னையில் இருந்து ரயில்கள் எப்போது இயக்கப்படுகிறது? ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பு! முழு விவரம்!

சென்னையில் இருந்து ரயில்கள் எப்போது இயக்கப்படுகிறது? ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பு! முழு விவரம்!



train when will start from chennai

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பேருந்து, ரயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. 

இதனையடுத்து மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், மாநில அரசுகளின் அனுமதி பெற்று சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், தமிழக அரசின் கோரிக்கைப்படி சிறப்பு ரயில்களை மீண்டும் தெற்கு ரெயில்வே ரத்து செய்தது. 

train

இந்தநிலையில், தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் பயணியா் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் 7 சிறப்பு ரெயில்கள் மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி முதற்கட்டமாக சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல் -கோவை சேரன் எக்ஸ்பிரஸ், எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல் -மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய 6 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்தநிலையில், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், ரயில் பயணத்தின் போது நோய்த்தொற்று பரவுவதை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.