#Breaking: 10ம் வகுப்பு பள்ளி மாணவி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை; 21 வயது இளைஞர் கைது.. திருவண்ணாமலையில் கொடூரம்.!

#Breaking: 10ம் வகுப்பு பள்ளி மாணவி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை; 21 வயது இளைஞர் கைது.. திருவண்ணாமலையில் கொடூரம்.!



 Tiruvannamalai Vandavasi 15 aged Girl Killed

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, சென்னாவரம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற இளைஞர், சிறுமியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

கொலையை அரங்கேற்றிய கொடூரன், சிறுமியின் உடலை முட்புதர் பகுதியில் வீசி இருக்கிறான். சிறுமியின் கொலை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி யோகேஸ்வரனை (வயது 21) கைது செய்தனர். 

அவனிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேற்படி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.