"எங்ககிட்ட வச்சிக்காதீங்க" - வனப்பகுதியை கொளுத்திவிட்டு பிழைக்கச்சென்ற இடத்தில் பயர்விட்ட பீகாரி புள்ளிங்கோஸ்.!



Bihar youths Fired uttarakhand forest after clip viral 4 Arrested 

 

பிகார் மாநிலத்தை சேர்ந்த நபர்கள் பலரும், வெளிமாநிலங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், உத்திரகனட் மாநிலத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்த பிகார் இளைஞர்கள், சில சர்ச்சைக்குரிய செயலை முன்னெடுத்துள்ளனர்.

பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றில் ஆத்திரமடைந்த பிகார் இளைஞர்கள், அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருக்கும் வனப்பகுதிக்கு தீ வைத்துள்ளனர்.

தாங்கள் தீ வைத்ததற்கு ஆதாரமாக வீடியோ எடுத்து, பீகாரியுடன் வைத்துக்கொள்ள வேண்டாம். மொத்த வனத்தையும் கொளுத்துவோம் என எச்சரிக்கையும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர். 

இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை முன்னெடுத்தனர்.

இச்சர்ச்சை செயலில் ஈடுபட்ட  முகமது நூருல், முகமது பெரோஸ், முகமது ஷலேம், முகமது நஜேபர், முகமது மோசர் ஆலம் ஆகியோரை கைது செய்தனர்.