மூன்று குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த இளம்பெண்!, காப்பாற்றி கரை சேர்த்த மக்கள்: குழந்தைகள் மூவரும் பரிதாப பலி..!

மூன்று குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த இளம்பெண்!, காப்பாற்றி கரை சேர்த்த மக்கள்: குழந்தைகள் மூவரும் பரிதாப பலி..!


the-young-woman-who-jumped-into-the-river-with-her-thre

திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா (27). இந்த தம்பதியினருக்கு நிலவரசு (5), குறளரசு (4) மற்றும் யாஷினி (1) என்ற 2 மகங்களும் 1 மகளும் உள்ளனர். இவர்கள் மூவரில் நிலவரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று பிற்பகலில் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்துள்ளார். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அங்கு நின்று கொண்டிருந்த அமுதா, தன்னுடைய 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்தார்.

தென்மேற்கு பருவ மழயின் காரணமாக, ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் அமுதாவுடன் சேர்ந்து 3 குழந்தைகளும், மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இந்த சம்பவத்தில் 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து, அமுதாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வாணாபுரம் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அமுதா குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்தாரா? அல்லது வறுமை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற் கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.