12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்…!! முழு விபரம் உள்ளே...

தமிழகத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இந்த தேர்வுகள் முடிந்ததும், மாணவர்களின் தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் தமிழகத்தின் பல்வேறு திருத்த மையங்களில் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7 ஆம் தேதி வெளியாகும் என்று பல செய்திகள் இணையத்தில் வைரலானன. ஆனால் அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தற்போது கிடைக்கும் தகவலின்படி 12 ஆம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. தற்போது, அந்தத் தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பதிவேற்ற செயல்முறை சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாக நடைபெறுவதால், தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகலாம் என கல்வித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோடை விடுமுறை நீட்டிப்பு?.. அமைச்சரின் பதிலால் குஷியில் மாணவர்கள்.!!
மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் இன்னும் சில தினங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களை கல்வித்துறை இணையதளம் மற்றும் செய்தி ஊடகங்களில் தொடர்ந்து கவனிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா..." இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!