சற்று முன்... இளைஞர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஷ்! தமிழகத்தில் முதல்வர் விஜய்யின் அடுத்த அறிவிப்பு!!!



tamil-nadu-new-sports-policy-vijay-government

தமிழக இளைஞர்களை விளையாட்டுத் துறையில் அதிகளவில் ஈடுபடுத்தும் நோக்கில், மாநிலத்தின் புதிய விளையாட்டுக் கொள்கை விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலி இடங்கள் விளையாட்டுத் திடல்களாக மாற்றம்

இதுதொடர்பாக பேசிய அமைச்சர், கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பயன்பாடின்றி உள்ள காலி இடங்களை கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த இடங்களை நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல்கள் ஆக மாற்ற அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் புதிய மாற்றம்.... முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!!

இதன்மூலம் உள்ளூர் அளவிலேயே இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் விளையாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களின் திறனை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல திட்டம்

ஏற்கனவே விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் பெண்களுக்கான 'சிங்கப்பெண்' உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது விளையாட்டுத் துறைக்கும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

புதிய விளையாட்டுக் கொள்கை மூலம் தமிழக இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

விரைவில் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தயாராகி வரும் இந்த புதிய கொள்கை குறித்த முழு விவரங்களையும் முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார். இதனால் விளையாட்டு துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! மகளிர் உரிமைத் தொகையில் தகுதியற்றவர்களின் பட்டியல் நீக்கம்..... இனி ரூ.2500 யாருக்கெல்லாம் கிடைக்கும்.? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!!