#BigBreaking: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் வீட்டில் ரைடு.. ஆட்டத்தில் அதிமுக?.. பரபரப்பாகும் தலைமை..! 

#BigBreaking: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் வீட்டில் ரைடு.. ஆட்டத்தில் அதிமுக?.. பரபரப்பாகும் தலைமை..! 



SPK Construction IT Raid

கடந்த ஆட்சிக்காலத்தில் அதிகளவு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் எடுத்து பார்த்த இ.பி.எஸ்-க்கு நெருக்கமானவரின் நிறுவனம் உரிமையாளர் வீட்டில் சோதனை நடப்பது அதிமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை - மதுரை சாலையில் எஸ்.பி.கே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்பணிகள் செய்து தரும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை. இவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல நெடுஞ்சாலைத்துறை பணிகள் இவரின் நிறுவனத்திற்கே செல்லும். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் 20 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், செய்யாதுரையின் வீடு, அலுவலகம், அவரின் மகன்கள் வீடு ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

இதில் அரசியல் மேல்மட்ட பிரச்சனை உள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் இருந்து வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் இச்சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2018 aam வருடம் வருமான வரித்துரைசோதனை நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.