பல ஆண்களுடன் சுற்றும் நீ ஒழுங்கா? எனக்கும் இத பண்ணு!. மகன் தாயை செய்த கொடூரம்!.

பல ஆண்களுடன் சுற்றும் நீ ஒழுங்கா? எனக்கும் இத பண்ணு!. மகன் தாயை செய்த கொடூரம்!.


son killed his mother

 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக லட்சுமியை தனியாக விட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்துவந்துள்ளார்.

லட்சுமி தையல் வேலை பார்த்துவந்துள்ளார். முதல் மகன் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகன் திருப்பூரில் உள்ள கல்லூரியில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் லட்சுமி, கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து மூத்த மகன் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த லட்சுமியின் இளைய மகன், அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல் பற்றி அம்மாவிடம் கூறி, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டுள்ளார். 

அப்போது மாணவனின் தாயார், அந்த மாணவிக்கு வயது அதிகம் இருப்பதால் வயது வித்தியாசம் உள்ளது. ஆகையால் திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வேணாம் என கூறியுள்ளார்.

அப்போது மாணவனுக்கும், அவருடைய தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மாணவன் தனது தாயாரை பார்த்து “நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாய்” என்று கூறியுள்ளான்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மாணவன், வீட்டில் இருந்த கயிற்றால் தயாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.