8 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கொட்டி தீர்க்க போகும் கனமழை.!

8 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கொட்டி தீர்க்க போகும் கனமழை.!



September 3rd 2023 weather report

வெயில் காலம் முடிந்து தற்போது மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. ஆனால், இன்னமும் வெயில் குறைந்த பாடில்லை. பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் லேசான மழை தூறல் உள்ளிட்டவை இருந்து வருகின்றது.

rain

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இன்று நெல்லை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், வேலூர், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று தெரியவந்துள்ளது.

rain

மேலும் இதைத் தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதியான நாளை கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில், செப்டம்பர் 5-ம் தேதி தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை பெய்ய க்கூடும் என்று தெரிய வருகிறது.