போலிஸ் போல பகட்டு.. பிராடு ஆசாமியை அலேக்காக தூக்கிய காவல்துறை..!



Police investigated cheating peoples

காவல்துறையினரை போல நடித்து லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசாவை நோக்கி சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பவர் லாரியில் சென்று கொண்டிருந்த போது, மதுக்கரை அருகே உணவகம் ஒன்றில் லாரியை நிறுத்திவிட்டு, தேநீர் அருந்துவதற்காக அவர் கடைக்குள் சென்றுள்ளார்.

அப்போது காவல்துறையினர் என கூறி வந்த ஒரு கும்பல் அவரிடம் ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்துள்ளனர். மேலும், ஆவணங்கள் எதுவும் சரியாக இல்லை எனக் கூறி ரூ.1,100 பணம் பறித்து சென்றுள்ளனர்.Mensஇதனால் அந்த கும்பலின் மீது நாகராஜனுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், மதுக்கரை காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் ஆத்துப்பாலம் பகுதியில் வசித்து வரும் முகமது அலி, பாஷா உள்ளிட்ட 4 பேர் என்பதும், காவல்துறை அதிகாரிகள் என கூறி போலியாக நடித்ததும் தெரியவந்தது.

இதன் காரணமாக காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.