"வா கட்டிக்கலாம்..." திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழிப்பு.!! வாலிபர் மீது போக்சோ வழக்கு.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 26 வயது இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.
16 வயது சிறுமியுடன் காதல்
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்(26). அதே பகுதியில் வசித்து வரும் ஏழை சிறுமி, படிக்க வசதி இல்லாததால் அங்குள்ள தனியார் நிறுவனமொன்ன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் அரவிந்த், அந்த சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூலக கட்டிடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டில் தனியாக இருந்த தனது காதலியை அருகிலுள்ள ஆள் நடமாட்டமில்லாத நூலக கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அரவிந்த். மேலும் சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய சிறுமி தனக்கு நடந்தது பற்றி பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "ஜூஸில் போதை மருந்து..." பள்ளி மாணவர்கள் பலாத்காரம்.!! இளைஞர் கைது.!!
போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அரவிந்தை கைது செய்து விசாரித்ததில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தது.
இதையும் படிங்க: "அடுத்தடுத்து மயங்கிய மாணவிகள்..." அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்.!! கூலி தொழிலாளிகள் கைது.!!