"ஜூஸில் போதை மருந்து..." பள்ளி மாணவர்கள் பலாத்காரம்.!! இளைஞர் கைது.!!

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பள்ளி மாணவர்களுடன் பழக்கம்
சிவகாசி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் சாம் டேவிட். 30 வயதான இவர் விருதுநகர் பொருட்காட்சியில் கார் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் பகுதி நேரமாக பொருட்காட்சியில் வேலை பார்க்க வந்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்கும் சாம் டேவிட்டும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது.
குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் அந்த இரண்டு மாணவர்களுக்கும் சிவகாசியில் வேலை வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார் சாம் டேவிட். தனது வீட்டில் வைத்து போதை மருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை அந்த இளைஞர்களுக்கு கொடுத்து இருக்கிறார். அதனை குடித்த இரண்டு மாணவர்களும் மயக்கம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் சாம் டேவிட்.
இதையும் படிங்க: "அடுத்தடுத்து மயங்கிய மாணவிகள்..." அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்.!! கூலி தொழிலாளிகள் கைது.!!
கைது செய்யப்பட்ட குற்றவாளி தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து இரண்டு மாணவர்களும் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை சாம் டேவிட்டை கைது செய்தது. மேலும் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு.!! கல்லூரி மாணவி மீது பலாத்க்கார முயற்சி.!! நிர்வாக அதிகாரி தலைமறைவு.!!