15 வயது சிறுமி கர்ப்பம்.. 40 வயது தாய்மாமா அதிர்ச்சி செயல்.. நாமக்கல்லில் பதறவைக்கும் சோகம்.!



in Namakkal 15 Year Old Girl Sexually Abused by Relative 

திருச்செங்கோடு பகுதியில் 15 வயது சிறுமிக்கு 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. இதில் தாய்மாமா கைது செய்யப்பட்டார், சிறுவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

10ம் வகுப்பு மாணவி.. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் உள்ள கிராமத்தில் கட்டுமான தொழிலாளி வசித்து வருகிற. இவருக்கு 15 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத காரணத்தால், மீண்டும் தேர்வு எழுத வீட்டில் இருந்து படித்து வருகிறார்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!

5 பேரால் பலாத்காரம்?

இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த சோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. மேலும், சிறுமி தன்னிடம் 5 பேர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

namakkal

தவெக நிர்வாகிகள்:

மேலும், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பம் கலைக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமலேயே கர்ப்பமும் கலைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

தாய்மாமா கைது:

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் தாய்மாமா தங்கவேல் (வயது 40) கைது செய்யப்பட்டார்.

சிறுமியின் உறவினர் மகனான 15 வயது சிறுவனையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!