இன்று அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

இன்று அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!



petrol diesel price increased

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் நாடு முழுவதும் கடும் நிதிச்சுமை ஏற்பட்ட  நிலையில், மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

petrol

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.88.07 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.80.90 ஆக விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.