அடப்பாவத்த... சரக்கு போட பணம் தராதவருக்கு பீர் பாட்டில் குத்து... சென்னையில் நடந்த பயங்கரம்.!



middle-aged-man-was-stabbed-to-death-because-of-refuse

சென்னை கோவிலம்பாக்கத்தில் மது குடிக்க காசு தராததால் பீர் பாட்டிலை வைத்து குத்தி  தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். 45 வயதான இவர்  பழைய பேப்பர் இரும்பு பொருட்களை வாங்கும் கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் பழைய இரும்பு பாட்டில்கள் மற்றும் பேப்பர் ஆகியவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்தவர்  கண்ணன்.

tamilnadu

பழைய பொருட்களை வாங்குவது மற்றும் விற்பதில் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பேக்கரி அருகில் கண்ணன் படுத்திருந்திருக்கிறார். அந்த வழியாக சென்ற மனோகரனை பார்த்த அவர் மது குடிக்க காசு கேட்டுள்ளார். ஏற்கனவே விற்ற பொருட்களுக்கு பணத்தை தராததால் ஆத்திரத்தில் இருந்த மனோகரன் காசு கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் இருந்த பாட்டிலை எடுத்து உடைத்து  மனோகரன் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இரத்த வெள்ளத்தில் மயங்கிய மனோகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவரது உடலை புனித பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு குற்றவாளியான கண்ணனை பிடித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.