சாதி மாறி காதல் திருமணம் செய்தவற்களை கொல்வதுதான் உங்க கௌரவமா.?மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.!

சாதி மாறி காதல் திருமணம் செய்தவற்களை கொல்வதுதான் உங்க கௌரவமா.?மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.!



makkal neethi maiyam talk about kumbakonam murder

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதி விளந்தகண்டம் அய்யா காலனியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அப்போது, மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியில்லாமல் கடந்த 5 நாட்களுக்கு முன் சென்னையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையறிந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல், தன் வீட்டிற்கு விருந்துக்கு வரும்படி அழைத்து இருவரையும் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கொலை செய்வது கௌரவமா? கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.