வீட்டுக்குள் விபரீதம் ஏதோ நடந்துருச்சா..? 2 நாட்கள் ஆகியும் போனையும் எடுக்கல.... கதவையும் திறக்கல! மீட்பு குழு வந்து கதவை உடைத்த போது காத்திருந்த பேரதிர்ச்சி.... வைரலாகும் வீடியோ!!!



bangladesh-teen-sleeping-viral-rescue

வங்காளதேசத்தில் டீன்ஏஜ் இளைஞர் ஒருவரைச் சுற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டுக்குள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்ததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இதையடுத்து அவசர மீட்புக் குழுவினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் உண்மை தெரியவந்தது.

இரண்டு நாட்களாக வெளியே வராத இளைஞர்

தகவலின்படி, அந்த இளைஞர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்று, முக்கிய வெளிக்கதவை வெளியே இருந்து தெரியாத வகையில் உள்புறமாக பூட்டிக்கொண்டுள்ளார். அதன்பின் தொடர்ந்து இரண்டு நாட்களாக அவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவருக்கு பலமுறை போன் செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. வீட்டின் கதவைத் தட்டியும் அவர் திறக்காததால், வீட்டுக்குள் ஏதேனும் விபரீதம் நடந்திருக்கலாம் என்ற பயம் அதிகரித்தது.

இதையும் படிங்க: காரில் கைவரிசையை காட்டிய திருடர்கள்! இறுதியில் உரிமையாளர் நடத்திய ட்விஸ்ட்டை பாருங்க.....! சிக்கி சிசிடிவி வீடியோ!!!

கதவை உடைத்து சென்ற மீட்புக்குழு

இதையடுத்து உடனடியாக மீட்புக்குழு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த குழுவினர் முதலில் வீட்டின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் படுக்கையறை கதவையும் திறந்து பார்த்தனர்.

அப்போது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த இளைஞர் எந்த பாதிப்புமின்றி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். வெளியே நடந்த பரபரப்பு பற்றியே அவருக்கு தெரியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இணையத்தில் வைரலாகும் சம்பவம்

குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பதற்றமும், தொடர்ந்து போன் எடுத்துக்கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கம் காரணமாக நடந்த இந்த பரபரப்பும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இதை ஆச்சரியத்துடனும் நகைச்சுவையுடனும் பகிர்ந்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் பிரபலத்தை பார்த்தீங்களா.... டோக்கியோ உணவக ஊழியர் செய்த செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ....!!!