இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 உண்டு....! வெளியான முக்கிய தகவல்...!!!
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்கள் மற்றும் புதிய பயனாளிகளைச் சேர்க்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் புதிய விண்ணப்பதாரர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டத்திற்காக சுமார் 29 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் பெண்களுக்கு தற்போது மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
புதிய விண்ணப்பதாரர்கள் காத்திருப்பு
இதற்கிடையில், பல்வேறு காரணங்களால் திட்டத்தில் சேர முடியாமல் போன பெண்கள் மற்றும் புதிதாக தகுதி பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். தகவலின்படி, மேலும் சுமார் 15 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு தரப்பில் நடைபெற்று வரும் ஆய்வு மற்றும் தரவுத் தொகுப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், புதிய பயனாளிகளை சேர்க்கும் பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்டுக்கு பின் அறிவிப்பு?
தமிழக அரசின் Interim Budget வெளியான பிறகு, புதிய விண்ணப்ப பதிவு தொடர்பான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்ப பதிவு முறை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இருந்தாலும், திட்ட விரிவாக்கம் தொடர்பான தகவல்கள் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!