திரைப்பட பாணியில் பயங்கரம்.. கல்லைக்கட்டி கடலுக்குள் வீசி மீனவர் கொலை.!



in Pudukkottai man Killed By 2 others 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி, ஆதிப்பட்டினம் கிராமத்தில் வசித்து வரும் மீனவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 30 அன்று, அதிகாலை நேரத்தில் கடலில் மீன்பிடிக்க வலையை வீசியுள்ளனர். 

அப்போது, இவர்களின் வலையில் 5 அடி நீளத்தில், கல்லில் கட்டப்பட்ட ஆணின் சடலம் சிக்கியது.இந்த விஷயம் குறித்து மணமேல்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை; 27 வயது நபர் போக்ஸோவில் கைது.!

அடையாளம் தெரிந்தது

கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளும் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர். இதனிடையே, உயிரிழந்த நபர் வடக்கு புதுக்குடி கிராமத்தில் வசித்து வந்த மாதவன் (வயது 38) என்பது தெரியவந்தது. 

pudukkottai

நம்பிக்கையில் இருந்த குடும்பம்

இவர் அடிக்கடி நபர்களுடன் வெளியூர் செல்வது, மீன்பிடிக்க கடலுக்குள் செல்வது என வெளியே சென்றால் ஒரு மாதம் கழித்துதான் வீட்டிற்கு வருவார். இதனால் அவரை தேடாமல் குடும்பத்தினரும் இருந்துள்ளனர். 

இரண்டு பேர் கைது

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக மாதவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர் மதுபோதையில் இருந்த போது, அதே ஊரில் வசித்து வரும் காளீஸ்வரன் (25), 17 வயது சிறுவன் ஆகியோர், உடலில் கல்லைக்கட்டி கடலுக்குள் வீசியதும் அம்பலமானது. 

விசாரணையை தொடர்ந்து குற்றவாளிகளான காளீஸ்வரன், 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: வேங்கைவயலில் நடந்தது என்ன? திட்டமிட்டு பரப்பப்பட்ட வன்மம்.. ஆயுதப்படை காவலரின் இழிச்செயல்.!