கள்ளக்காதலி இறந்த துக்கத்தால் சோகம்; கள்ளக்காதலன் விஷம் குடித்து உயிரை மாய்த்த விபரீதம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, எஸ். குருபட்டி பகுதியில் வசித்து வருபவர் மாதேஷ் (வயது 39). இவர் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். மாதேஷுக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார்.
கள்ளக்காதல் பழக்கம்
அங்குள்ள சந்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி (வயது 29). மாதேஷ் - அஞ்சலி இடையே கடந்த ஆனது ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மாதேஷின் மனைவி நேத்ராவுக்கு, மாதேஷ் - அஞ்சலி இடையே இருக்கும் தொடர்பு தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த நேத்ரா, தனது குடும்பத்துடன் ஓசூருக்கு கணவரை அழைத்துச் சென்று வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: #JustIN: 14 வயது சிறார்கள் கும்பலால், அக்கா-தங்கை பலாத்கார முயற்சி.. ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..! ஐவர் கைது.!
துக்கத்தால் சோகம்
இதனிடையே, கடந்த 26 ம் தேதி அஞ்சலி விஷம் குடித்து தற்கொலை செய்தார். இந்த விஷயம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் மாதேஷிடமும் விசாரணை செய்வ முடிவெடுத்துள்ளனர்.
கள்ளக்காதலியின் மரணம் மாதேஷை சோகத்தில் ஆழ்த்தி இருந்துள்ளது. இதனால் அவர் கெலமங்கலம் மலைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி இருந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உறக்கத்தால் நேர்ந்த சோகம்.. லாரி ஓட்டுநர் பரிதாப பலி., 25 அடி ஆற்றில் தலைகுப்புற வாகனம்.!