மனைவியின் தங்கையுடன் ஓட்டமெடுத்த கணவன்!. தங்கையின் கணவனும், மனைவியும் எடுத்த விபரீத முடிவு!.



husband-escapped-with-his-wife-sister


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்களத்தை சேர்ந்த ராஜா என்பவர் இவரது மனைவி தங்கம்மாள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்துவந்துள்ளார். அதே பகுதியில் தங்கம்மாவின் தங்கை சத்யா, ராமமூர்த்தி என்பவருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் ராஜாவுக்கும், அவரின் மனைவி சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் தொடங்கியது. இதனை அறிந்த தங்கம்மாள் கணவன் ராஜாவை கண்டித்துள்ளார். ஆனால் புத்திசாலித்தனமாக பதிலளித்த ராஜா தகாத உறவு தவறில்லை என நீதிமன்றமே சொல்லவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

illegal affairs

கடந்த சில நாட்களுக்கு முன் சத்யாவை ராஜா கடத்தி சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கம்மாள் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதேபோல் மனைவியை காணாத துக்கத்தில் ராமமூர்த்தியும் தற்கொலைக்குமுயற்சித்து அவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும், பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.