அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை அறிவிப்பு!. சோகத்தில் மூழ்கிய சென்னை மக்கள்!.



heavy rain in tamilnadu


இந்தியப்பெருங்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியை அடுத்து இந்திய பெருங்கடல் வரை நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது. 

weather

இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது