காதலுக்காக ஆணாக மாறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... கைவிட்டு சென்றதால் கண்ணீருடன் பரிதவிப்பு.!

காதலுக்காக ஆணாக மாறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... கைவிட்டு சென்றதால் கண்ணீருடன் பரிதவிப்பு.!



girl-changed-into-boy-for-her-love

காதலிப்பதாக கூறி ஒரு பெண், மற்றொரு பெண்ணை கட்டாயப்படுத்தி ஆணாக அறுவை சிகிச்சை செய்ய வைத்து, ஏமாற்றி பிரிந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசுதா. இவருக்கும் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்துவந்த செந்திலா என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மலர்ந்த நிலையில், இருவரின் வீட்டாருக்கும் தோழிகளாக பழகுவது தெரிந்துள்ளது. ஆனால் இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியாத நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

மேலும் செந்திலா, ஜெயசுதாவிடம் ' நீ ஆணாக மாற வேண்டும்' என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021ல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநம்பியாக மாற ஜெயசுதா உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும், ஜெயசுதாவை ஹார்மோன் ஊசி போட்டு கொள்ளுமாறும் செந்திலா அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் ஜெயசுதா ஹார்மன் ஊசியும் செலுத்தி வந்துள்ளார்.

அத்துடன் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜெயசுதா என்ற தனது பெயரை ஆதிசிவனாக மாற்றி இருவரும் தைப்பொங்கல் அன்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

madhurai

இந்த விஷயம் செந்திலாவின் பெற்றோருக்கு தெரியவர, அதிர்ந்த அவர்கள் செந்திலாவின் பொருட்களையும், உடைமைகளையும் எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு அழைத்து வந்ததையடுத்து, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் இருவரையும் அழைத்து வந்து விசாரணை செய்ததில், செந்திலா ஜெயசுதாவுடன் ஒன்றாக வாழ விருப்பமில்லாமல் தனது பெற்றோருடன் செல்வதாக கூறியிருக்கிறார். இதனால் மனமுடைந்து போன ஜெயசுதா பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், தனக்கு உரிய நீதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.