தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா உறுதி! மகிழ்ச்சியளிக்கும் விதமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா உறுதி! மகிழ்ச்சியளிக்கும் விதமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்து 3,680 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 64 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் மகிழ்ச்சியளிக்கும் விதமாக இன்று ஒரே நாளில் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் இன்று 2,869 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது சிகிச்சையில் 46,105 பேர் உள்ளனர்.