பட்டப்பகலில் பயங்கரம்.. நடுரோட்டில் 22 வயது ரௌடி சரமாரியாக வெட்டிக்கொலை..! பரபரப்பு சம்பவம்.!

பட்டப்பகலில் பயங்கரம்.. நடுரோட்டில் 22 வயது ரௌடி சரமாரியாக வெட்டிக்கொலை..! பரபரப்பு சம்பவம்.!



Chennai Villivakkam 22 Aged Rowdy Ranjith Murder by 4 Man Gang Police Investigation

எதிரிகள் அதிகரித்ததால் தலைமறைவாக வாழ்ந்து வந்த ரௌடியை சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக சாலையில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பாரதி நகரில் வசித்து வருபவன் ரஞ்சித் என்ற டபுள் ரஞ்சித் (வயது 22). இவனின் மீது செங்குன்றம், சோழவரம், வில்லிவாக்கம் உட்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த ரஞ்சித்துக்கு எதிரிகள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், உயிருக்கு பயந்து செங்குன்றத்தில் வசித்து வந்துள்ளான். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளான். 

chennai

அப்போது, வில்லிவாக்கம் புதிய ஆவடி சாலையில் உள்ள ஆடுதொட்டி அருகே வருகையில், இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கும்பல் ரஞ்சித்தை இடைமறித்து சாலையிலேயே சரமாரியாக வெட்டிச்சரித்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அண்ணா நகர் காவல் துறையினர், ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதத்தில் கொலை சம்பவம் நடந்ததா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.