நீ பத்தினி ன்னு நிரூபி.. இரண்டாவது கணவனால் மதியை இழந்து, மகளுக்கு தீ வைத்து கொலை செய்த தாய்.!
நீ பத்தினி ன்னு நிரூபி.. இரண்டாவது கணவனால் மதியை இழந்து, மகளுக்கு தீ வைத்து கொலை செய்த தாய்.!
உன்னை பத்தினி என நிரூபணம் செய்ய, உனது முதல் கணவரின் மகளின் மீது தீ வைத்து கொளுத்து என்று இரண்டாவது கணவன் சண்டையிட்டதில், ஆத்திரத்தில் மதியை இழந்த தாய் மகளுக்கு உயிருடன் கொல்லி வைத்த பரிதாபம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 41). இவர் ஐ.ஓ.சியில் டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 38). இவர்கள் இருவருக்கும் கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பவித்ரா என்ற 13 வயது பெண் குழந்தை இருக்கிறார்.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட இரண்டாவது கணவர் பத்மநாபன், தினமும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், எனது குழந்தையை காப்பாற்றவே உன்னை திருமணம் செய்துகொண்டேன் என அவ்வப்போது ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதனை நம்பாத பத்மநாபன், அவ்வப்போது ஜெயலட்சுமியின் உடலில் வித்தியாசமான வாசனை வருகிறது. நீ எங்கு சென்று வந்தாய்? யாருடன் பழகுகிறாய்? என சந்தேக கேள்விகளை எழுப்பி வந்துள்ளார். நேற்று இரவு 12.30 மணியளவில் சண்டை நடந்த நிலையில், நீ உண்மையில் கற்புக்கரசியாக இருந்தால் மகள் பவித்ராவின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வை.
நீ பத்தினி என்றால் அவளின் உடலில் தீ பிடிக்காது என்று கூறி தகராறு செய்துள்ளார். ஆத்திரத்தில் மதியை இழந்த தாய் ஜெயலட்சுமியும் மகளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பவித்ராவின் உடலில் தீ பற்றி அலறவே, அவரை காப்பாற்ற இருவரும் போர்வையை போட்டு தீயை அணைத்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், திருவெற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அங்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அனுமதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, 78 % தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், காவல் துறையினர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே, வழக்குப்பதிவு செய்த திருவெற்றியூர் காவல் துறையினர் பத்மநாபன் மற்றும் ஜெயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, சிறுமியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.