Rain Alert: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென்மேற்கு பருவமழை தீவிரத்தை காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று வெவ்வேறு தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.