வெளியே படுத்திருக்கீங்களா?.. இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.!



Chennai IMD on 2 may 2024 Evening Report 10 PM 


தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது.  இதனால் பல மாவட்டங்களில் வெப்ப அலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

அதிக வெப்பம் காரணமாக சில மாவட்டங்கள் திடீர் மழையும் பெய்து வருகிறது. இது மக்களை வெப்பத்தின் பிடியில் இருந்து தவிர்க்க உதவுகிறது. 

இந்நிலையில், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.