உல்லாசத்தப்ப இனிச்சது, இப்ப கசக்குதா?.. கள்ளக்காதலை கைவிட்ட நபருக்கு ஆபாச அர்ச்சனை; கள்ளக்காதலி கொலை முயற்சி.!



Chengalpattu Affair Issue Women Murder Attempt 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் @ குள்ளன். இப்பகுதியில் வசித்து வரும் பெண்மணி பிரியா. பிரதாப்புக்கு திருமணம் முடிந்து கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். பிரியாவுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. 

இதனிடையே, பிரதாப் - பிரியா இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பிரதாப்பை அவரின் மனைவி & மைத்துனர்கள் கண்டித்து அறிவுரை வழங்கி இருக்கின்றனர். 

இதனால் பிரதாப் தனது கள்ளகாதலியை கைவிட்டு இருக்கிறார். இது பிரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, பிரியா தகாத வார்த்தையால் பிரதாப்பை பெண்கள் முன்னிலையில் கழுவி ஊற்றியுள்ளார்.

Chengalpattu

மேலும், அதற்குள் நான் உனக்கு பிடிக்காமல் போயிட்டேனா?. அன்று என்னுடன் நன்றாக இருந்தாய். இன்று உனக்கு என்னை பிடிக்கவில்லையா? என சரமாரி கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்.

இது பிரதாப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அதிகாலை நேரத்தில் பிரியாவின் வீட்டிற்கு சென்று உறங்கிய பிரியாவின் மீது மண்ணெண்ணெய், தின்னர் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். உடலில் தீ எரிந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட பிரியா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.