எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.! போலீஸார் அதிரடி.!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.! போலீஸார் அதிரடி.!


case-filed-on-eps-and-ops

முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு அதிமுக தரப்பு காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இந்தநிலையில், நேற்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. 

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் சென்று வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் கூடியதாக சர்ச்சை எழுந்தது. 

இதனை அடுத்து ராயப்பேட்டை போலீசார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 250 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.