அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
காலி பாட்டில் வாங்க புதிய நடைமுறை... ரூ.10 திரும்ப கிடைக்கும்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் வகையிலும், டாஸ்மாக் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் முறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காலி மதுபாட்டில்களை இயந்திரம் மூலம் சேகரிக்கும் புதிய தொழில்நுட்பம் சில டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையில் மதுபாட்டிலை வாங்கும்போது கூடுதலாக ரூ.10 டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை உரிய முறையில் திரும்ப ஒப்படைத்தால் அந்த ரூ.10 தொகை வாடிக்கையாளருக்கு மீண்டும் வழங்கப்படும். டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய திட்டத்தில் இந்த தொகையை மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலையுடன் (MRP) இணைப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இயந்திரத்தில் காலி மதுபாட்டிலை செலுத்தும்போது, பாட்டிலில் உள்ள QR குறியீடு உள்ளிட்ட விவரங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு, பாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஊழியர்களுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதுடன், பாட்டில்களை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்யவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் மதுபாட்டிலில் இறந்த வண்டு? குடித்த தொழிலாளிக்கு வாந்தி, மயக்கம்.!
காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் ஏற்கெனவே சில மாவட்டங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 டெபாசிட் பெற்று, பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தொகையைத் திருப்பி வழங்கும் நடைமுறை தொடர்பாக டாஸ்மாக் சார்பில் சுற்றறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே, நவீன இயந்திரம் மூலம் காலி பாட்டில்களைப் பெறும் முயற்சி விரிவுபடுத்தப்பட்டால், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் சேகரிப்பு நடைமுறை மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போது இது குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளில் மட்டுமே சோதனை முன்னோட்ட முறையில் செயல்படுத்தப்படுவதால், அனைத்து கடைகளிலும் இந்த வசதி உடனடியாக கிடைக்கும் எனக் கூற முடியாது.
இதையும் படிங்க: இனி கொண்டாட்டம் தான்... செப்டம்பர் 1-ம் தேதி முதல் குடிமகன்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...! அமலுக்கு வரும் அதிரடி லிஸ்ட்...!!!