இன்றுமுதல் கட்டணம் உயர்வு!! ஏடிஎம் போறதுக்கு முன்னாடி இதை படிச்சு பார்த்துட்டு போங்க!!

நாடு முழுவதும் வங்கி மற்றும் ATM பயன்பாட்டில் இன்றுமுதல் பல்வேறு மாற்றங்கள் செயல்முறைப்படுத்தப்பட்ட உள்ளது.
1 . ஏடிஎம்களில் சில இலவச சேவை போக பண பரிமாற்றத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம் தற்போதைய 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2 . இதுவரை இலவசமாக இருந்த தபால் மூலம் வீடு தேடி வரும் வங்கி சேவைகளுக்கு, இனி கட்டணமாக 20 ரூபாயும், அதற்கான ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 . வங்கி பணமில்லா மற்ற பரிமாற்றத்திற்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
4 . வங்கி வேலை நாட்களில் மட்டும் இயங்கி வந்த, NACH எனப்படும் தேசிய தானியங்கி பணப்பரிவர்த்தனை முகமை இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பளம் வரவு, ஓய்வூதியம் மற்றும் இஎம்ஐ கட்டணம் செலுத்துதல் போன்றவற்றிற்காக காத்திருக்க தேவை இல்லை.