பிரபல துணை நடிகைக்கு பாலியல் தொல்லை.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம், ரசிகர்கள்.!
பிரபல துணை நடிகைக்கு பாலியல் தொல்லை.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம், ரசிகர்கள்.!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், காதல் தொல்லை, வரதட்சணை கொடுமை என பல்வேறு பிரச்சனைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதில், திரைத்துறையில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருந்து வருவதாக பகீர் குற்றசாட்டுகள் எழுந்தது.
மீ டூ விவகாரத்தில் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என திரைத்துறையை பலரின் உண்மை சுயரூபம் வெளிவந்து மக்களிடம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், மீண்டும் ஒரு பாலியல் தொல்லை புகார் எழுந்துள்ளது.
சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட புகாரில், துணை நடிகையாக பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு வருவதாக புகார் வழங்கப்பட்டுள்ளது.