'பெண்களின் சபரிமலை' மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.. புகழ்பெற்ற சக்தி தலம்.!



Mandaikadu Bhagavathi Amman Temple The Revered Shakti Shrine Known as the Sabarimala for Women

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலுக்கு தெற்கே அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டுதோறும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்திற்கு வந்து பகவதி அம்மனை தரிசித்து வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பாக, சுமார் 15 அடி உயரமுள்ள புற்று வடிவிலான மூலவரில் பகவதி அம்மன் அருள்பாலிப்பதாக தல வரலாறுகள் கூறுகின்றன. அந்தப் புற்று இயற்கையாக உருவானது என்றும், அதன் முன்பாக வெண்கல மற்றும் வெள்ளி திருவுருவங்களிலும் அம்மன் காட்சியளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

Mandaikadu Bhagavathi Amman

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், "பெண்களின் சபரிமலை" என்ற பெயராலும் அறியப்படுகிறது. குறிப்பாக மாசி மாத கொடை விழாவின்போது விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மனை தரிசிக்க வருவது நீண்டகால மரபாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மீக பாணியை தொடரும் விஜய்! டெல்லி பயணத்திற்குப் பின் தொடரும் அந்த ரகசிய பயணம்... பின்னணியில் இருக்கும் அதிரடி காரணம்..!!!

இத்தலத்தில் வழிபட்டால் தீராத துன்பங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், குழந்தைப்பேறு கிடைக்கும், திருமணத் தடை விலகும், கடன் சுமைகள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

இதன் காரணமாக வாழ்வில் நன்மை வேண்டி ஏராளமானோர் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

மாசி மாத கொடை விழா, நவராத்திரி உள்ளிட்ட திருவிழாக்கள் இக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுவதால் பக்தர்கள் திரளாக பங்கேற்று பகவதி அம்மனின் அருளைப் பெற்று செல்கின்றனர்.

இதையும் படிங்க: குழந்தை வரம் அருளும் ஆனைமலை மாசாணியம்மன்..! பக்தர்கள் நம்பும் அதிசய சக்தி ஸ்தலம்..!