கால்பந்து ஜாம்போவான் மெஸ்ஸியை மைதானத்திற்குள் சரம்வாரியாக தாக்கிய வீரர்! அதிர்ச்சி வீடியோ!



fight in football ground


கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும், மேடெல் தலைமையிலான சிலி அணியும் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றிப்பெற்றது.
 
அந்த போட்டியின் 37 வது நிமிடத்தில், சிலி அணியின் மெடெல், மெஸ்ஸியை சரமாரியாக தலையால் முட்டி தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து இரு அணி வீரர்களும், மைதானத்திலே மோதிக்கொண்டதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



 

இந்தநிலையில் மோதலில் ஈடுபட்ட இரு அணித்தலைவர்களுக்கும் சிவப்பு அட்டை காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றினார் நடுவர். உலக ரசிகர்களை கவர்ந்த
மெஸ்ஸியின் கால்பந்து வரலாற்றில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது இதுவே இரண்டாவது முறையாகும். 

இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு, மெஸ்ஸி முதன் முறையாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நினைவுக் கூரதக்கது. இந்த நிலையில் இரண்டாவதுமுறை மெஸ்ஸி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.